சந்திரன், சூரியன் மற்றும் பூமி மூன்றுமே நேர்க்கோட்டில் வருவதனால் ஏற்படும் நிகழ்வு தான் கிரகணம். நாளை இரவு முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வெறும் கண்ணாலே இந்த சந்திர கிரகணத்தை பார்க்கலாம். அதேசமயம் ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். பூமியின் நிழல் சந்திரன் மீது படரும் போது நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதுபோன்ற சிவப்பு நிற நிலவு தோன்றுவது அரிது என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
நாளை இரவு 8:58 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கும், இரவு 11:01 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி நிலவு இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். பின்பு அதிகாலை 12:23 மணிக்கு கிரகணம் முடிவடையும். கிட்டத்தட்ட 85 நிமிடங்கள் நிலவு இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். வருகின்ற 2028 டிசம்பர் 31ம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது என்று அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
