34 வாகனங்களில் குண்டுவெடிப்பு… பரபரப்பை கிளப்பிவிட்ட ஜோதிடர்… மும்பையில் நடந்த பயங்கர சம்பவம்…!

By Divyamayakannan on புரட்டாதி 6, 2025

Spread the love

மும்பை, நாடு முழுவதும் கடந்த 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பிரம்மாண்டமாக தொடங்கியது. பத்து நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியின் இறுதி நாள் இன்று. விநாயகர் சிலைகளை இன்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். மராட்டிய மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியை வருடா வருடம் கோலாகலமாக கொண்டாடப்படும் . இதைத்தொடர்ந்து மும்பை காவல்துறையினருக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. மும்பையில் 14 தீவிரவாதிகள் 400 கிலோ ஆர்டிஎஸ் வெடி மருந்தை வைத்துக்கொண்டு உலாவி வருவதாகவும். 35 வாகனங்களில் வெடி மருந்து வெடிக்க தயாரான நிலையில் உள்ளதாகவும் குறுஞ்செய்தி வந்துள்ளது.

இந்நிலையில் மும்பையில் உள்ள அஸ்வினி குமார் (51) என்ற ஜோதிடரை மிரட்டல் விடுவதற்காக போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பீகாரை சேர்ந்தவர் உத்தரப்பிரதேசத்தில் வசித்து வருகிறார். இவருடைய நண்பரை போலீசில் சிக்க வைப்பதற்காகவே இதுபோன்ற மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு அஸ்வினி குமார் மீது அவரது நண்பர் ஒருவர் போலீசில் புகார் அளித்ததன் பெயரில், மூன்று மாதம் அஸ்வினி குமார் சிறையிலும் இருந்து வந்துள்ளார். ஜாமினில் வெளியே வந்த அவர் நண்பனை பழி வாங்குவதற்காகவே இதுபோன்ற மிரட்டலை விடுத்துள்ளார். நண்பனின் தொலைபேசி மூலமாக மும்பை போக்குவரத்து போலீசுக்கு இதுபோன்ற மிரட்டல் தகவலை அனுப்பி உள்ளார். போலீசார் மேலும் ஜோதிடர் அஸ்வினி குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.