“பரிசு வாங்கித்தரேன் வா” கள்ளக்காதலியை ஏமாற்றி கூட்டிச்சென்ற காதலன்… கால்வாயில் கிடந்த சடலம்.. அதிரவைக்கும் பின்னணி..!!

By Soundarya on சித்திரை 17, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் பண்டரிபுரம் வட்டத்தில் உள்ள போஸே கிராமத்தைச் சேர்ந்த சோனாலி நேதாஜி ஜாதவ் (34) என்ற சமூக வலைதளப் பிரபலம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் பிரபலமான இவர், தனது கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த துக்காராம் காவந்தரே என்பவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், சோனாலிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக துக்காராம் சந்தேகப்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த துக்காராம், சோனாலியைக் கொலை செய்யத் திட்டமிட்டார். கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி, பிறந்தநாள் பரிசு வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி சோனாலியைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு சோனாலி வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

   

இதற்கிடையில், ரோப்ளே பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அது காணாமல் போன சோனாலி என்பது உறுதி செய்யப்பட்டது. சந்தேகத்தின் பேரில் துக்காராமைக் கைது செய்து விசாரித்தபோது, சோனாலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து சடலத்தைக் கால்வாயில் வீசியதை அவர் ஒப்புக்கொண்டார். இக்கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.