பரூச் நகரில் கந்துவட்டி கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள ஒரு ஜவுளி வியாபாரி, தனது தொழில் தேவைக்காகக் கந்துவட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். வெறும் 3 லட்சம் ரூபாய் கடனுக்காக, வட்டிக்கு மேல் வட்டி போட்டு அந்த கும்பல் அவரிடமிருந்து இதுவரை 18 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது. இவ்வளவு கொடுத்தும் தாகம் தீராத அந்தக் கும்பல், வியாபாரியின் கடைக்கே புகுந்து அவரைத் தாக்கி, ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
இந்தத் தொடர் மிரட்டல்களால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் திலீப் சுதார், சினிமா பாணியில் ஒரு ‘ஸ்டிங் ஆபரேஷன்’ (Sting Operation) செய்யத் திட்டமிட்டார். தனது கடையில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி, வட்டி கேட்டு மிரட்டிய அஜய் ஷா என்பவரின் அராஜகங்களை ஆதாரங்களுடன் பதிவு செய்தார். இந்த வீடியோ ஆதாரங்களுடன் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வியாபாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் அஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே பல கந்துவட்டிக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படுபவர்கள் பயப்படாமல் புகார் அளிக்க வேண்டும் எனப் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரையில், தமிழகத்தில் 2026 பொதுத்தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று கருதப்பட்ட சாதி மற்றும் மத…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், த.வெ.க ஆட்சியை 'நடிகன் கட்சி' என நக்கல், நையாண்டி செய்பவர்களுக்கும்,…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், முதலமைச்சர் விஜய் தமிழக மக்களுக்கும் எதிர்க்கட்சித்…
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதிலுரையின் பேசிய முதல்வர் விஜய், தான் திரைத்துறையில் இருந்தபோது சந்தித்த அரசியல் நெருக்கடிகள் குறித்தும், தனது திரைப்படங்களுக்குக்…
"நான் ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து சி.எம். ஆன மாதிரி சில பேர் இமேஜ் கிரியேட் பண்றாங்க.. அது…
பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…