பரூச் நகரில் கந்துவட்டி கும்பலின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள ஒரு ஜவுளி வியாபாரி, தனது தொழில் தேவைக்காகக் கந்துவட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். வெறும் 3 லட்சம் ரூபாய் கடனுக்காக, வட்டிக்கு மேல் வட்டி போட்டு அந்த கும்பல் அவரிடமிருந்து இதுவரை 18 லட்சம் ரூபாயை வசூலித்துள்ளது. இவ்வளவு கொடுத்தும் தாகம் தீராத அந்தக் கும்பல், வியாபாரியின் கடைக்கே புகுந்து அவரைத் தாக்கி, ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
रील नहीं रियल है । किस्सा हमारे यहाँ का है।भरूच में सूदखोरी का आतंक बढ़ा..
कपड़ा व्यापारी से 3 लाख के बदले 18 लाख वसूले…
दुकान में घुसकर मारपीट की गाली गलौज मारने की धमकी दी ।
दुकानदार ने स्टिंग ऑपरेशन कर कैमरा लगवाया था
दुकानदार दिलीप सुथार ने सूदखोरी के आरोपी अजय शाह के खिलाफ… pic.twitter.com/O01hgppQlb— Rajak Shaikh (@imrajak_) March 16, 2026
இந்தத் தொடர் மிரட்டல்களால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் திலீப் சுதார், சினிமா பாணியில் ஒரு ‘ஸ்டிங் ஆபரேஷன்’ (Sting Operation) செய்யத் திட்டமிட்டார். தனது கடையில் ரகசிய கேமராக்களைப் பொருத்தி, வட்டி கேட்டு மிரட்டிய அஜய் ஷா என்பவரின் அராஜகங்களை ஆதாரங்களுடன் பதிவு செய்தார். இந்த வீடியோ ஆதாரங்களுடன் அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வியாபாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் அஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே பல கந்துவட்டிக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்படுபவர்கள் பயப்படாமல் புகார் அளிக்க வேண்டும் எனப் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
