Pooja room

அசைவம் சாப்பிடும் நாட்களில் வீடுகளில் பூஜையறையில் விளக்கேற்றலாமா? ஆன்மிக சாஸ்திரங்கள் சொல்வது என்ன? தெரிஞ்சுக்கலாமா…?

By Elango on மார்கழி 6, 2025

Spread the love

ஆன்மீக சாஸ்திரங்களின்படி குடியிருக்கும் வீட்டில் விளக்கேற்றாமல் எப்போதும் இருக்கக் கூடாது. அசைவம் சாப்பிட்டாலும் குளித்துவிட்டு விளக்கு ஏற்றலாம். மாறாக பூஜை அறையை பூட்டி வைப்பதும் விளக்கு ஏற்றாமல் இருப்பதும் முற்றிலும் தவறாகும். அசைவம் சாப்பிடுபவர்கள் காலையிலேயே குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம். அசைவம் சாப்பிட்ட பிறகு மாலையில் மீண்டும் குளித்துவிட்டு விளக்கு ஏற்றலாம். இதனால் எந்த தோஷமும் இல்லை.

அசைவம் சாப்பிடும் நாட்களில் வீட்டில் விளக்கு ஏற்றாமல் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் அசைவம் சாப்பிட்டவுடன் நேரடியாக சென்று தான் விளக்கு ஏற்ற கூடாது. குளித்து விட்டு சுத்தமாக விளக்கு ஏற்றலாம். குளிப்பது என்பது உடலை மட்டுமல்ல மனதையும் சுத்தப்படுத்தும் செயலாக உள்ளது. அதனால் குளித்த பிறகு பூஜை அறையில் உள்ள ருத்ராட்சம் சாளக்கிராமம் போன்ற புனித பொருட்களை தொட்டு பூஜை செய்யலாம்.

   

அதேசமயம் அசைவம் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சென்று குளித்துவிட்டு விளக்கு ஏற்ற கூடாது. அசைவம் வீட்டில் சமைத்து வைத்துவிட்டு அந்த வாசனை வீட்டில் இருக்கும் போதும் விளக்கு ஏற்றுவது தவறாகும். அசைவம் சாப்பிடும் சமயத்தில் ருத்ராட்சம் போன்ற தெய்வ சின்னங்களை அணிந்திருக்கவும் கூடாது. இது அதன் புனிதத் தன்மை மற்றும் தெய்வீக தன்மையை அவமதிப்பதற்கு சமமாகும் என்று சாஸ்திரங்கள் கூறுவதாக ஆன்மிக அன்பர்கள் கூறுகின்றனர்.