விஜய் சொன்னதால தான்.. லியோ படத்தின் கதை மாற்றபட்டதா..? உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர் லலித்…!!

By Priya Ram

Published on:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த 19- ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் லியோ படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.

   

படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி ஒரு வாரம் வரை பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆனது. லியோ படம் பொன்னியின் செல்வன், ஜெய்லர் உள்ளிட்ட படங்களின் சாதனை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லியோ படத்தின் ட்ரெய்டிலர் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.

ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வெளியான லியோ படம் ரிலீசான முதல் நாளே 148.5 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் லலித் லியோ பட கதையில் மாற்றம் செய்யப்பட்டதா என்பது குறித்து கூறினார். அவர் கூறியதாவது, முதலில் இயக்குனர் லோகேஷ் விஜயிடம் கதையை கூறினார்.

அந்த கதை விஜய்க்கு பிடித்து போனது. இதனையடுத்து நான் விஜயை சந்தித்து கதை சூப்பராக உள்ளது. ஆனால் சிறு சிறு மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினேன். நான் கூறியதை ஏற்று விஜய் லோகேஷிடம் பேசியுள்ளார். அதனை ஏற்று கொண்டு லோகஷும் கதையில் சிறு. சிறு மாற்றங்களை கொண்டு வந்தார் என லலித் கூறினார்.

author avatar
Priya Ram