நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெற்ற எதிர்பாராத தோல்விக்குப் பிறகு, அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரக் கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவின் உட்கட்சி மறுகட்டமைப்பின் ஒரு பகுதியாக, சென்னை அமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்களின்படி, முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னை கிழக்கு மாவட்ட எல்லையிலிருந்து கொளத்தூர் பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சென்னை வடக்கு’ மாவட்ட எல்லைக்குள் கொளத்தூர் மற்றும் பெரம்பூர் தொகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதனால் சென்னை வடக்கு மாவட்டத்திற்குப் புதிய மாவட்டச் செயலாளர் ஒருவரை நியமிக்கக் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளதால், கொளத்தூர் தொகுதிக்கானப் பொறுப்பிலிருந்து சேகர்பாபு விடுக்கப்படுகிறார். கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றதற்குச் சேகர்பாபுவின் களப் பணிக் குறைபாடே முக்கியக் காரணம் என உள்கட்சியினரிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்துவந்த சூழலில், இந்த எல்லை மாற்றமும் புதிய மாவட்டச் செயலாளர் நியமனமும் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க, அதன் தலைவர் ஜோசப் விஜய்…
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி,…
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய சோழவந்தான் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, ஜல்லிக்கட்டு போட்டி…
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் ஐ.டி. அணிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமைச்சர்…
திருநெல்வேலி பொதிகை நகரைச் சேர்ந்த ஜஸ்டின் - ஜூலியட் தம்பதியினர், சென்னையில் வசிக்கும் தங்கள் மகனைக் காண்பதற்காக தனியார் ஆம்னி…
தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.50 கோடி பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள்…