திருநெல்வேலி பொதிகை நகரைச் சேர்ந்த ஜஸ்டின் – ஜூலியட் தம்பதியினர், சென்னையில் வசிக்கும் தங்கள் மகனைக் காண்பதற்காக தனியார் ஆம்னி பேருந்து ஒன்றில் பயணம் மேற்கொண்டனர். கயத்தாறு சுங்கச்சாவடியைத் தாண்டி கரிசல்குளம் அருகிலுள்ள ஒரு நெடுஞ்சாலை உணவகத்தில் இரவு உணவிற்காகப் பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது, தங்களது இருக்கையிலேயே 40 சவரன் தங்க நகைகள் அடங்கிய கைப்பையை வைத்துவிட்டு இருவரும் சாப்பிடச் சென்றனர். உணவு முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது, அவர்கள் விட்டுச் சென்ற கைப்பை திருடப்பட்டிருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து உடனடியாகப் பேருந்து ஓட்டுநரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் சற்றும் தாமதிக்காமல் பேருந்தை அனைத்து பயணிகளுடன் கயத்தாறு காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றார். அங்குப் பேருந்தில் இருந்த பயணிகளிடமும் அவர்களது உடைமைகளிலும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். இருப்பினும் யாரிடமும் அந்த நகைகள் சிக்கவில்லை. இதனையடுத்து, பேருந்து நிறுத்தப்பட்டிருந்த உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பயணிகள் உணவருந்தச் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்தத் துணிகரத் திருட்டில் ஈடுபட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னைக்கும் தென் மாவட்டங்களுக்கும் இடையே தினமும் ஏராளமான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், உணவகங்களில் பேருந்துகள் நிற்கும் நேரத்தைக் குறிவைத்து இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. கடந்த ஆண்டும் இதே உணவகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் பயணம் செய்த ஒருவரிடமிருந்து 10 லட்சம் ரூபாய் இதே பாணியில் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து தனியார் பேருந்துகளிலும், நெடுஞ்சாலை உணவகங்களிலும் கட்டாயமாகக் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் எனப் பயணிகள் பலரும் வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கேரள மாநிலம் குட்டியாட்டூர் - கண்ணூர் வழித்தடத்தில் இயங்கும் 'பார்வதி' என்ற தனியார் பேருந்தில் மனிதநேயத்தை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவம்…
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள மெகந்திபூர் பாலாஜி பகுதியில் கடந்த ஆகஸ்ட் 17 அன்று பெண் ஒருவரின் ரத்த…
2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றித் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க, அதன் தலைவர் ஜோசப் விஜய்…
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி,…
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய சோழவந்தான் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, ஜல்லிக்கட்டு போட்டி…
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் ஐ.டி. அணிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமைச்சர்…