“நான் இன்னும் சாகலப்பா”…. இறுதிச்சடங்கு வீட்டிற்குள் உயிருடன் நுழைந்த நபர்…. சுடுகாட்டில் காத்திருந்த மக்களுக்கு பேரதிர்ச்சி….!

Spread the love

இலங்கையில் போலீசாரால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், தனது இறுதிச் சடங்கிற்காக தயார் செய்யப்பட்டிருந்த வீட்டிற்கு உயிருடன் நேரில் வந்த விசித்திரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கோஹோபன்குலமவைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்ற நபரே, காவலில் இருந்தபோதே உயிரிழந்துவிட்டதாக போலீசாரால் அவரது உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இச்செய்தியைக் கேட்ட குடும்பத்தினரும் கிராமமக்களும் உடனடியாக இறுதிச் சடங்கு நடவடிக்கைகளில் இறங்கினர். கிராமம் முழுவதும் இரங்கல் பேனர்கள் தொங்கவிடப்பட்டு, பந்தல்கள் அமைக்கப்பட்டு, தகனக் கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன.

ஆனால், அனைவரையும் உரையவைக்கும் விதமாக, கீர்த்திசேன திடீரென உயிருடன் நடந்து வந்து தனது சொந்த இறுதி ஊர்வலத்திற்காகச் சமைக்கப்பட்ட வீட்டின் முன்னே நின்றார். இறந்துவிட்டதாகக் கருதப்பட்டவர் கண்ணெதிரே உயிருடன் வந்ததைக் கண்ட கிராமவாசிகள் மற்றும் உறவினர்கள் பேரதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர். இந்த அசாதாரணமான மற்றும் குழப்பம் நிறைந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதிலும் பெருமளவிலான அலைகழிப்பும், பரபரப்பும் தொற்றிக்கொண்டதுடன், போலீசாரின் இந்தத் தவறான அறிவிப்பு குறித்து உள்ளூர் மக்கள் பலத்த அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

Nanthini

Recent Posts

“அறிவாலயத்தில் திடீர் பூகம்பம்”…. தவெகவை எதிர்கொள்ள ஸ்டாலின் போட்ட சீக்ரெட் பிளான்…. தொண்டர்களுக்கு மேலிடம் போட்ட உத்தரவு…..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றித் கழகத்திடம் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, அண்ணா அறிவாலயத்தின் நீண்ட அமைதியை உடைக்கத் திமுக…

4 minutes ago

செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் புதிய RTO விதிமுறை…. வாகன ஓட்டிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!

தமிழ்நாட்டில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை அச்சிடப்பட்ட அட்டைகளாக தபால் மூலம் அனுப்புவதற்குப் பதிலாக, மின்னணு (டிஜிட்டல்)…

16 minutes ago

“எம்.எல்.ஏ-க்கள் சொன்னா செல்லாது”…. விஜய் பிரதமர் விவகாரத்தில் அமைச்சர் வெங்கடரமணன் போட்ட திடீர் ‘யூ-டர்ன்’… பரபரப்பு பேட்டி…!

தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக தவெக…

24 minutes ago

BREAKING: ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து…. ஒருவர் பலி, பலர் சிக்கியதாக அச்சம்…. பதறவைக்கும் கள நிலவரம்….!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில், மருந்து கலவை தயாரிக்கும் பணியின் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட…

35 minutes ago

சேலத்தை உலுக்கிய கொடூரம்…. குடிநீர் தொட்டியில் துண்டு துண்டாக சாக்கு மூட்டை… பின்னணியில் காதலர்கள் போட்ட பகீர் பிளான்…. வெளிச்சத்திற்கு வந்த திடுக்கிடும் உண்மை….!

சேலம் அரிசிபாளையத்தில் நடைபெற்ற கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரிசிபாளையத்தைச் சேர்ந்த ரமேஷ்…

41 minutes ago

“கறிக்குழம்பு வைக்கலையா?”…. ஒரு கிண்ணம் குழம்புக்காக மனைவியை உயிரோடு முடித்த கணவன்… நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரம்….!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் அருகே உள்ள பாரசேரி பகுதியைச் சேர்ந்த ரஷீத் என்பவர், கறிக்குழம்பு சமைக்காத ஆத்திரத்தில்…

45 minutes ago