#image_title
வீட்டில் பூஜை அறை என்பது முக்கியமான ஒன்று பொதுவாக எல்லோரும் தினமும் இருவேளை அல்லது ஒரு வேளையாவது வீட்டில் விளக்கு ஏற்றி செல்வம் பெருகவும், நோய் நொடி இல்லாமல் வாழவும், வீடு தெய்வ கடாட்சமாக தெய்வங்களால் நிறைந்திருக்கவும் பிரார்த்திப்பர். அப்படி நம் வீட்டில் தெய்வம் நிறைந்திருக்க வேண்டுமானால் நம் வீட்டு பூஜை அறையில் ஒரு சில பொருட்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அது என்னவென்று இனி காண்போம்.
நம் வீட்டு பூஜை அறையில் ஒரு சில பொருட்கள் கட்டாயம் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் வீட்டில் தெய்வ சக்தியை ஈர்த்து நல்லவைகள் நடக்கும். நேர்மறை சக்திகள் பெருகும். முதலில் நம் பூஜை அறையில் இருக்க வேண்டியது விளக்கு அதிலும் குறிப்பாக மண் விளக்கு ஏற்றுதல் மிகவும் சிறப்பானது.
ஊதுபத்தி சாம்பிராணி ஆகியவற்றின் நறுமணம் பூஜை அறையில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இது தீய சக்திகளை விரட்டியடிக்கும். பூஜை செய்வதற்கு பித்தளையால் ஆன மணி கண்டிப்பாக பூஜை அறையில் இருக்க வேண்டும். இந்த மணியை அடிக்கும்போது எதிர்மறை சக்திகள், தீய சக்திகள் வீட்டை விட்டு வெளியேறி நேர்மறை சக்திகள் வீட்டுக்குள் வரும்.
பூஜை அறையில் தாமிரம் அல்லது செம்பினால் ஆன பாத்திரத்தில் நீர் வைக்க வேண்டும். அந்த நீரில் இரண்டு பூக்களை தூவி வைக்க வேண்டும். புனித நதிகளின் தீர்த்தங்கள் கிடைத்தால் அதை வைக்கும் போது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
பூஜை அறையில் பகவத் கீதை, ராமாயணம் போன்ற தெய்வீக தன்மைகள் நிறைந்த புனித நூல்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அடுத்ததாக நம் வீட்டு பூஜை அறையில் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வைக்க வேண்டும். நம் வீட்டின் தெய்வங்களின் நிழலும் முன்னோர்களின் நிழலும் அந்த கண்ணாடியில் விழுந்து அருள் பாலிப்பதாக சொல்லப்படுகிறது.
வீட்டின் பூஜை அறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசி, பருப்பு, சில்லறை காசுகள் போன்ற மங்களப் பொருட்களை நிரப்பி வைத்து பூஜை செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இதனால் நம் வீட்டில் வறுமை, உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே நம் வீட்டில் சாமி படங்களை தவிர இந்தந்த பொருட்களை நம் வீட்டில் வாங்கி வைக்கும்போது நம் வீடு தெய்வ கடாட்சத்துடன் இருக்கும் மற்றும் பல சுப காரியங்கள் நிகழும் என்பது ஐதீகம்.
தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…
தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.…