Categories: சினிமா

கோடி ரூபா கொடுத்தாலும் நான் அத மட்டும் செய்ய மாட்டேன்.. கருணாஸின் அந்த கொள்கைக்கு இதுதான் காரணமாம்!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கருணாஸ். இவர் நடிகர் மட்டுமல்ல .ஒரு இசையமைப்பாளரும் கூட. அது மட்டும் இல்லாமல் இவர் தமிழக அரசியலிலும் களமிறங்கி கலக்கியவர். சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் ‘லொடுக்கு பாண்டி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகில் அறிமுகமானார்.

இத்திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரானார். இதைத் தொடர்ந்து வில்லன், புதிய கீதை ,திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

மேலும்  திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்த மாமா போன்ற திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி குணச்சித்திர  கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இடையில் அவர் அரசியல் கட்சி தொடங்கி அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். அதன் பின்னர் தற்போது மீண்டும் நடிகராக தன் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

அவர் சினிமாவில் அறிமுகமாகி 23 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் இந்த காலத்தில் அவர் 160 படங்கள்தான் நடித்துள்ளார். இந்நிலையில் தான் ஏன் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பது குறித்து கருணாஸ் பதிலளித்துள்ளார்.

அதில் “என்னையும் விளம்பரங்களில் நடிக்கக் கூப்பிட்டார்கள். ஆனால் நான் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டேன். ஏனென்றால் நான் பயன்படுத்தாத ஒரு பொருளை ஒரு வருடமாக பயன்படுத்தியதாக பொய் சொல்லி அப்பாவி மக்கள ஏமாத்த விரும்பல. விஷத்த விளம்பரம் செய்தா வாங்கி சாப்பிடும் நிலை இப்போ வந்துடுச்சு” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“ஸ்டீயரிங்கை தொட்டுக் கும்பிட்டு கண்ணீர்…” பணி ஓய்வு நாளில் பஸ்சுக்கு முத்தம் கொடுத்து விடைபெற்ற டிரைவர்… கேரளாவில் நெகிழ வைக்கும் வீடியோ வைரல்…!!

கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இடுக்கி மாவட்டம் குமளி டிப்போவில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவர் பால் குரியன். இவர்…

2 minutes ago

எங்கள பிடிக்க உங்களால… முடியவே முடியாது சார்… போலீசாருக்கு சவால் விட்டுவிட்டு… வெளிநாட்டுக்குத் தப்பிய Gen-Z சுட்டிகள்… இணையத்தில் வைரல்…!

கோர்ஜி கும்பலைச் சேர்ந்த இளம் சுட்டிகளான ஆரியன் சிந்து மற்றும் சத்யம் கடியான், ஹரியானா நாட்டுப்புற பாடகர் அங்கித் பாலியன்…

12 minutes ago

கோடாரி, வாளுடன் வாலிபரை தாக்க பாய்ந்த கும்பல்… தடுக்க முயன்ற பெண்… இணையத்தில் வைரலாகும் பயங்கர வீடியோ…!!

சமூக வலைத்தளங்களில் கோடாரி மற்றும் வாள் போன்ற கூர்மையான ஆயுதங்களுடன் இளைஞர் ஒருவரைத் தாக்கப் பாயும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ…

14 minutes ago

அடபாவிங்களா…! காதலிக்காக மருத்துவமனை சென்ற வாலிபர்… வார்டில் ஒலித்த அந்த ஒரு பாட்டு… ஆஸ்பத்திரி பெட்டில் நடந்த விபரீத டுவிஸ்ட்…!!

காதலில் விழுந்தவர்கள் செய்யும் வேடிக்கையான குளறுபடிகளுக்கு என் நண்பன் ஒருவனின் வாழ்க்கையில் நடந்த சம்பவமே சிறந்த உதாரணம். அவனுக்குக் காரம்…

41 minutes ago

“திருவிழா முடியட்டும் கல்யாணம் பண்ணிக்கிறேன்!”… மாயமானதாக நாடகமாடிய காதலன்… 7 மாத கர்ப்பிணியை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்…!!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் அழுகிய…

52 minutes ago

“அய்யோ காப்பாத்துங்க..!” அதிவேகத்தில் வந்த கார்… நடுரோட்டில் அலறல் சத்தம்… கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொத்தேரியில் உள்ள தனியார்…

1 மணத்தியாலம் ago