தேசிய அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமீபகாலமாக மாநில அரசியலை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சொந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்பாகவே தனது காரசாரமான கண்டனத்தைப் பதிவு செய்து அதிரடி காட்டிய கனிமொழி, அதைத் தொடர்ந்து சபரிவர்மன் லாக்கப் மரணம், பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் போன்ற தவெக அரசுக்கு எதிரான முக்கியமான பிரச்சினைகளிலும் முன்னின்று குரல் கொடுத்து வருகிறார்.
மாநில அளவிலானப் பிரச்சினைகளில் அவர் காட்டும் இந்தத் தீவிரமான ஈடுபாடும் உடனடி எதிர்வினைகளும், அவர் டெல்லி அரசியலில் இருந்து விலகி தமிழக மாநில அரசியலுக்குள் அதிகாரப்பூர்வமாகத் தடம் பதிக்க ஆயத்தமாகிறாரா என்ற கேள்வியையும் எதிர்பார்ப்பையும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் வலுப்படுத்தியுள்ளது.
