Categories: சினிமா

பட்டினத்தார் பாடலைக் காப்பியடித்தாரா கண்ணதாசன்… கமல்ஹாசன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

Spread the love

50 களில் முதலில் படங்களுக்கு கதை வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்ணதாசன் 50 களின் இறுதியில் படங்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரின் பாடல்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் அவர் பாடல் எழுதுவதில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினார்.

தமிழ் சினிமாவின் பாடல் ஆசிரியர்களில் கண்ணதாசன் அளவுக்கு புகழ்பெற்றவர்கள் யாரும் இல்லை. அவர் இறந்து 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றளவும் அவர் பாடல்கள் கொண்டாடப்பட்டு, அவர் நினைவு கூறப்படுகிறார்.

கண்ணதாசனின் பாடல்கள் உச்சத்தைத் தொட்டாலும் அவரை உட்கார வைத்துப் பாடல்கள் எழுதி வாங்குவதும் கடினமான ஒன்று. அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சொன்ன நேரத்தில் அவர் பாடல்கள் எழுத வரமாட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் வந்துவிட்டால் பாடல்கள் எழுதிக் கொடுத்துவிட்டுதான் போவார்.

அப்படி அவர் பாதகாணிக்கை என்ற படத்துக்காக எழுதிய பாடல்தான் “வீடுவரை உறவு… வீதிவரை மனைவி… காடுவரை பிள்ளை…. கடைசிவரை யாரோ” என்ற தத்துவப் பாடல். இந்த பாடல் தமிழர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த பாடல். இன்றளவும் தமிழ்நாட்டில் இறுதி ஊர்வலங்களில் பாடப்படும் பாடலாக உள்ளது.

ஆனால் இந்த பாடலை கண்ணதாசன் பட்டினத்தாரின் பாடல் ஒன்றிலிருந்துதான் தழுவி எழுதியுள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் ஒரு நேர்காணலில் சொல்லும் போது அந்த பாடல் வெளிவந்த போது நான் கண்ணதாசன் பட்டினத்தாரைக் காப்பியடித்துவிட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகுதான் எனக்குப் புரிந்தது. இப்படி ஒன்றில் இருந்துதான் இன்னொன்று வரும் என்று.

கண்ணதாசன் உந்துதல் பெற்ற பட்டினத்தார் பாடல் வரிகள் இவைதான்.

மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே

யினமான சுற்ற மயானம் மட்டே வழிக்கேது துணை

தினையாமள வௌளளவாகினு முன்பு செய்ததவந்

தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்குஞ் சத்தியமே

vinoth

Recent Posts

4 மாத கர்ப்பிணி மனைவி கொலை வழக்கு…! “கணவரை கொடூரமாக குத்தி….” காரில் வந்தவர் வெறிச்செயல்… பழிக்கு பழியா…? நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சிகள்…!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…

51 minutes ago

இவன் என்ன விட்டுட்டு போக பாக்குறான் சார்… ஓடும் காரில் தொங்கிய பெண்… உ . பி – யில் நடந்த சம்பவம்… பகீர் பின்னணி…!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…

54 minutes ago

“அந்த VVIP யார்…?” ரிசார்ட்டில் மறுக்கப்பட்ட சிறப்பு சேவை…! இளம்பெண் படுகொலையில் விலகாத மர்மம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…

59 minutes ago

அடச்சீ… எப்படி இவ்வளவு கொடூரமாக இருக்க முடியும்?… நேபாளத்தில் ஆற்றில் வீசப்பட்ட நாய்… இணையத்தை உலுக்கிய அதிர்ச்சி வீடியோ… கொந்தளிப்பில் நெட்டிசென்கள்…!!

நேபாளத்தில் உள்ள சேதி ஆற்றில் ஒரு நாயைப் பாலம் வழியே உயிருடன் தூக்கி வீசும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

“டாக்டராக மாறிய டிரைவர்…” மருந்து சீட்டெல்லாம் எழுதி கொடுக்கிறாரே…! அரசு மருத்துவமனையில் நடந்த கூத்து…. இணையத்தை அதிர வைத்த சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…

1 மணத்தியாலம் ago

அசந்து தூங்கிய போது பயங்கரம்…! “கணவரின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு…” முதல் மனைவி, பிள்ளைகள் சேர்ந்து செய்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…

1 மணத்தியாலம் ago