தமிழ் சினிமாவில் டைரக்டர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர்,தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருபவர் தான் எஸ் ஜே சூர்யா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகிலும் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வாலி மற்றும் குஷி ஆகிய இரண்டு திரைப்படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தன.
அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் குஷி திரைப்படத்தில் ஏராளமான காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் குஷி திரைப்படத்தில் பலரின் ஃபேவரிட் சீனாக அமைந்த ஜோதிகாவின் இடுப்பு சீன் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.
அதில், குஷி திரைப்படத்தில் அந்த இடுப்பு சீனை எடுப்பதற்கு மூன்று நாட்கள் ஆகியது. விமானம் ஒன்று போக வேண்டும் என்பதற்காக ஒரு நாள் முழுக்க காத்திருந்தேன். என்னடா இவ குளோசப் ஷாட் எடுக்க மூன்று நாட்கள் எடுத்துக் கொள்கிறானே என பலரும் திட்டினார்கள். ஆனால் நான் நினைத்தபடி தான் அந்த சீனை எடுத்தேன். அந்த பொறுமையும் உழைப்பும் தான் இன்று வரை எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்துள்ளது என்று எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…