Connect with us

CINEMA

காலைல எப்போவும் அங்கதான் இருப்பார் ; அதனால் தான் எங்களுக்கு சண்டை வரும்….. ஜாலியாக சூர்யா பற்றி உண்மையை சொன்ன ஜோதிகா

தமிழ் சினிமாவில் பூவெல்லாம் கேட்டுப்பார் மூலம் அறிமுகமானவர் ஜோதிகா. தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், அஜித், விஜய், கமல், ரஜினி என பெரிய நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். நடிகர் சூர்யாவை காதலித்த ஜோதிகா 7 வருடங்கள் காத்திருந்து அவரை திருமணம் செய்து கொண்டார். இன்றும் பலர் சூர்யா ஜோதிகா போல் வாழ வேண்டும் என சொல்லி வருகிறார்கள்.

Jyothika in ponmagal vanthal

   

இந்த அற்புதமான ஜோடிக்கு தியா, தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர். எட்டு வருடங்கள் குழந்தைகளுக்காக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் 36 வயதினிலே மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள் என கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா, 25 வருடங்களுக்கு பிறகு ஹிந்தி சினிமாவில் மீண்டும் நடிக்கிறார்.

Suriya and jyothika

இதற்காக குடும்பத்துடன் குடிபெயர்ந்த ஜோதிகா, ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஹிந்தி மீடியாவுக்கு ஜோதிகா அளித்த பெட்டியில் சூர்யாவுடன் எதற்கு சண்டை போடுவீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு யாரும் எதிர்பார்க்காத பதிலை கொடுத்தார். சூர்யா மற்றவர்கள் மாதிரி கிடையாது, சண்டை எல்லாம் போட மாட்டார்.

Jyothika about fight with suriya

ஆனால், காலையில் அவர் பாத்ரூம் சென்றால் அங்கேயே உட்காந்து விடுவார், வெளியே வர நேரம் ஆகும். இதற்கு தான் நான் சண்டை போடுவேன். இப்போதும் அதேதான், சூர்யாவே இந்த விஷயத்தில் மாறவே இல்லை என கலகலப்பாக பேசினார் ஜோதிகா.

author avatar
Deepika
Continue Reading

More in CINEMA

To Top