Connect with us

CINEMA

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அம்மாவுடன் லைவ்.. தன் தாய் தாக்கப்பட்டதை குறித்து மனம் திறந்த ஜோவிகா..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரம் நாமினேஷனில் சரவணன் விக்ரம், விசித்ரா, பூர்ணிமா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், மணி, ஜோவிகா ஆகியோர் சிக்கி இருந்த நிலையில் சரவண விக்ரம் இந்த வாரம் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த பிக் பாஸ் ஜோவிகாவை எலிமினேட் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

   

வெளியேறும் முன்பே ஜோவிகா எல்லோரிடமும் பேசும்போது தனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இது தெரியும், எனக்கு ஒரு கனவு வந்தது, அதில் கமல் சாறுடன் நின்று என் பயண வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன். அதுதான் தற்போது நடந்துள்ளது. உங்களிடம் எந்த சண்டையும் இல்லாமல் தற்போது நல்ல நட்புடன் வெளியேறுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி எனக் கூறிவிட்டு வெளியே சென்றார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு தன் அம்மாவுடன் யூடியூப்பில் லைவில் பேசிய ஜோவிகா, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தான். இப்போது நான் நல்ல மனநிலையில் உள்ளேன். வெளியே வந்ததும் என் அம்மாவிற்கு முகத்தில் அடிபட்ட செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். இதற்கு பதில் சொல்ல வேண்டிய நாள் விரைவில் வரும். சிலருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். ஆனால் சிலரிடம் எச்சரிக்கைகள் விடுக்க விரும்புகிறேன். சிலருக்கு நான் பதிலும் கூற வேண்டும். இவை அனைத்தும் விரைவில் நடக்கும் என ஜோவிகா பேசியுள்ளார்.

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top