Categories: சினிமா

ஜோக்கர் பட இயக்குனரின் மனைவிக்கு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த துன்புறுத்தல்.. பரபரப்பு புகார்..!

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்தான் ராஜு முருகன் . இவர் குக்கூ, ஜோக்கர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஜோக்கர் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் சசிகுமாரை வைத்து தற்போது படம் இயக்கி வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி ஹேமா சின்ஹா என்ற மனைவியும் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இப்படியான நிலையில் ராஜூ முருகன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகின்றார். சென்னை ஐயப்பன் தாங்கலை அடுத்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பமாக வசித்து வரும் நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 2000க்கும் அதிகமான வீடுகள் உள்ளது.

இங்கு திரை பிரபலங்கள் பலரும் இந்த குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இதனிடையே இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சில பாலியல் ரீதியிலான குற்ற சம்பவங்கள் நடந்து வருவதாக ராஜு முருகனின் மனைவி ஹேமா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகளிடம் புகார் அளித்து பாலியல் ரீதியான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் கண்டு கொள்ளாததால் இது தொடர்பாக புகார் அளித்த ராஜூ முருகனின் மனைவி ஏமாவுக்கு குடியிருப்பு சங்க நிர்வாகிகள் மன உளைச்சலை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ராஜு முருகனின் மனைவி ஹேமா சார்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், நாங்கள் வசிக்கும் குடியிருப்பில் சினிமா பிரபலங்கள் பலரும் வசித்து வருகிறார்கள். இதனால் கட்டுப்பாடுகள் உள்ளது. இதற்கான பணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை பராமரிப்பு தொகை வசூலிக்கப்படும் நிலையில் முன்கூட்டியே பராமரிப்பு தொகையை அளிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர்.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை 22,000 பராமரிப்பு தொகை கொடுத்தும் கூட எங்களின் வீட்டை பராமரிக்க தவறுகிறார்கள். இது குறித்து கேள்வி கேட்டால் மன உளைச்சலை குடியிருப்பு சங்க நிர்வாகிகள் தருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பாலியல் ரீதியிலும் துன்புறுத்தலும் நடைபெறுகிறது. போலீசில் புகார் அளித்தாலும் குடியிருப்பு நிர்வாகிகள் பேசி நடவடிக்கை எடுக்காத படி தடுக்கிறார்கள் என்று ஹேமா குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது தொடர்பாக போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Nanthini

Recent Posts

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

38 minutes ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

43 minutes ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

49 minutes ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

54 minutes ago

BREAKING: “3 கோடி ரூபாய்.. 3 மணி நேரம்”… கோவையில் உச்சக்கட்ட அதிகாரப் போட்டி… நடுரோட்டில் இறங்கிய அதிமுக வேட்பாளர்…!

கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…

57 minutes ago

“2ம் உலகப்போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்”… லண்டனில் 30 நாட்டு ராணுவ மாஸ்டர்மைண்டுகள் போட்ட ரகசிய பிளான்…!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…

1 மணத்தியாலம் ago