தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. 2002 ஆம் ஆண்டு ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் ஜெயம் ரவி. தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, தாஸ், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.
இவரது படங்கள் நடுவில் சற்று தோல்வியை தழுவினாலும் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார் ஜெயம் ரவி. கடந்த வருடம் இவர் நடித்த பிரதர் என்ற திரைப்படமும் தோல்வியையே சந்தித்தது. இந்தநிலையில் ஜெயம் ரவி நித்யா மேனன் நடித்த “காதலுக்கு நேரமில்லை” திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த திரைப்படத்தின் விமர்சனம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.
காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் ஐடி ஊழியராக ஜெயம் ரவி நடிக்கிறார். தன்னுடன் பணிபுரியும் நித்யா மேனனை காதலிக்கிறார். தனது காதலை நண்பர்களின் உதவியால் அவரிடம் வெளிப்படுத்துகிறார். இதை எடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் நாயகனின் கல்லூரி காதலி குறுக்கே வருகிறார், இதை எடுத்து நாயகன் ஏமாற்றி விட்டதாக நினைத்த நாயகி பிரிந்து சென்று விடுகிறார்.
நாயகன் எவ்வளவோ முயற்சித்தும் நாயகி ஏற்றுக்கொள்ளவில்லை. கோபத்தின் உச்சிக்கு சென்ற நாயகன் நாயகியை அடித்து விடுகிறார். கர்ப்பிணியாக இருக்கும் நாயகி மது அருந்த தொடங்குகிறார். அதற்கு பிறகு இவர்கள் இணைந்தார்களா என்ன நடந்தது என்பது மீதி கதை.
இந்தப் படத்தைப் பொறுத்த வரைக்கும் ட்விட்டரில் விமர்சனமாக கூறப்படுவது இது நல்ல ஒரு பீல் குட் ரோம் காம் ஆக இல்லை என்று கூறுகிறார்கள். நித்யா மேனன் ஜெயம் ரவியின் கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்திருக்கிறது. ஏ ஆர் ரகுமானின் சாங் மற்றும் பிஜிஎம் நன்றாக இருக்கிறது. இதுவரை ஓரளவு நல்ல விமர்சனங்களை காதலுக்கு நேரமில்லை படம் பெற்று வருகிறது. இனி போகப் போக என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…