காலையிலேயே குட் நியூஸ்… நகைக்கடன்… மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு….!

By Nanthini on கார்த்திகை 21, 2025

Spread the love

பொதுவாகவே நாம் அவசர தேவை என்றால் நம்மிடம் இருக்கும் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணம் பெறுவது வழக்கம். நாம் அடகு வைக்கக்கூடிய நகைக்கி பொருத்தவாறு வங்கிகளில் இருந்து நமக்கு கடன் வழங்கப்படும். அதற்கு வட்டி செலுத்தி வரும் பட்சத்தில் வருடத்திற்கு ஒருமுறை அதனை மீண்டும் திருப்பி வைக்க வேண்டும். ஒருவேளை அப்படி முயலாவிட்டால் நகைகள் ஏலத்தில் விடப்படும். தற்போது நகைக்கடன் விதிகளில் தொடர்ந்து பல மாற்றங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.

அதன்படி கூட்டுறவு வங்கிகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு 7000 ரூபாய் கடன் வழங்கும் நடைமுறை நவம்பர் 17 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் வரை 42 லட்சம் பேருக்கு சுமார் 45 ஆயிரம் கோடி நகை கடன் வழங்கப்பட்டிருப்பதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். தற்போது நகைக்கான கடன் தொகை உயர்த்தப்பட்டிருப்பது மேலும் இலட்சக்கணக்கானோருக்கு பலனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.