குஷியோ குஷி… பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவசம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 21, 2025

Spread the love

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இப்படியான நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இதுவரை 27,90,093 பள்ளி குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட கண் பரிசோதனைகள் 2,00,214 பேருக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். பள்ளி குழந்தைகள் ஸ்கிரீன் டைம் அதிகரித்ததே கண் பார்வை பாதிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.