#image_title
சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் அடுத்தடுத்து சினிமாவில் ஹீரோவாக நடிப்பது என்பது சாதாரண விஷயம். அதே நேரம் சினிமாவில் கேமராவுக்கு பின் வேலை செய்யும் கலைஞர்களின் வாரிசுகள் சினிமாவுக்கு வருவது அவ்வளவு எளிதல்ல. அப்படி வந்தாலும் அவர்கள் சினிமாவில் காலூன்றுவது என்பது கடினம். அப்படி சினிமா பின்புலத்தில் இருந்து வந்தாலும், தனக்கென்று தனி அடையாளங்களை பெற்றிருப்பவர்கள் நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா. இவர்களின் தந்தை எடிட்டர் மோகன்.
#image_title
சினிமாவில் ஒரு எடிட்டராக தனது பயணத்தை தொடங்கிய மோகன் பிற்காலத்தில் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் சுமார் 63 வருட அனுபவம் உள்ளவர் மோகன். 1954-ம் ஆண்டு சினிமாவுக்கு வந்தவர் 50 மொழி மாற்று படங்களையும், 17 நேரடி படங்களையும் தயாரித்து இருக்கிறார். இவரது மூத்த மகன் மோகன் ராஜா, ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது இரண்டாவது மகனான ரவியும், இதேப் படத்தில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
குடும்பமாக சேர்ந்து முன்னேறுவது என்பது இவர்களை பார்த்து கற்றுக் கொள்ளலாம். தந்தை தயாரிக்க, மூத்த மகன் இயக்க, இளைய மகன் நடிக்க என தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் வளர்ந்து கொள்வர். அப்படி இந்த மூவர் கூட்டணி ஒன்றினையும் போதெல்லாம், அமையும் படங்கள் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும். அப்படி தான் ஜெயம் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. மோகன் ராஜா இயக்கத்தில், ரவி, சதா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியானது ஜெயம் படம்.
தெலுங்கில் 2002-ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தை, அதேப் பெயரில் தமிழில் ரீமெக் செய்திருந்தனர். படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜா, ஜெயம் ராஜா எனவும், ரவி ஜெயம் ரவி எனவும் பிரபலமானார்கள். தெலுங்கில் இசையமைத்திருந்த ஆர்.பி.பட்நாயக்கே தமிழிலும் இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து முழு படத்தையும் பார்க்க, படத்தின் தயாரிப்பாளர் மோகன் கிளம்பியுள்ளார்.
#image_title
அப்போது அவருக்கு போன் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தானும் படத்தை பார்க்க வருவதாக அடம்பிடித்துள்ளார். சரி என மோகன் கூற, தனது மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் என குடும்பத்துடன் ஜெயம் படத்தின் முன்னோட்டக் காட்சியை பார்த்துள்ளார் ரஜினி. இடைவேளையின் போது, மோகனை சந்தித்த ரஜினி, எதற்கு இவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள் எனக் கேட்டாராம். அதற்கு பதிலளித்த மோகன், தனது இரு மகன்களின் எதிர்காலமாச்சே எனக் கூறினாராம். இந்த சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் மோகன்.
#image_title
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…