“ஜப்பானின் முதல் எழுத்தறிவுத் தூதர்…” நேபாளத்தில் வளர்ந்த 17 வயது மாணவி அதிதி பௌடேல் சாதனை… குவியும் பாராட்டுக்கள்…!!

By Devi Ramu on புரட்டாதி 2, 2026

Spread the love

ஜப்பானில் பிறந்து, தனது சிறுவயதுக் காலத்தை நேபாளத்தில் கழித்த அதிதி பௌடேல் என்ற 17 வயது மாணவி, ஜப்பானின் முதல் எழுத்தறிவுத் தூதராக நியமிக்கப்பட்டுப் பெரும் சாதனை படைத்துள்ளார். சிறுவயதிலேயே புத்தகங்கள் மற்றும் செய்தித் தாள்களை வாசிப்பதில் அதீத ஆர்வம் காட்டி வந்த அதிதி, பள்ளிக்குச் செல்லும் முன்பே தனது தாத்தா கொடுத்த சிக்கலான தேவநாகரி எழுத்து வடிவிலான செய்தித்தாள்களை எளிதாக வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

தற்போது டோக்கியோவில் உயர்நிலைப் பள்ளி இறுதி ஆண்டு படித்து வரும் இவர், வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதிலும், கற்றல் ஆர்வத்தை இளைஞர்களிடையே பரப்புவதிலும் காட்டிய ஈடுபாட்டின் காரணமாக ஜப்பானின் முதல் எழுத்தறிவுத் தூதராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இவரது இந்தச் சாதனைக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.