மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளுக்கு இப்படி ஒரு பரிசா?.. 5 கோடி மதிப்பிலான காரை பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்திய பிரபலம்..!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக 80 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர். இவருடைய புதிய கார் குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஊதா நிற lamborghini காரை ஜான்வி கபூரின் நெருங்கிய தோழி பரிசாக வழங்கியுள்ளார். இந்தக் காரின் மதிப்பு சுமார் 5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த உயர் ரக கார் மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தபோது பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. இவ்வளவு விலை உயர்ந்த காரை ஜான்விக்கு பரிசாக வழங்கியது அனன்யா பிர்லா. இவர் பிரபல பாடகி மற்றும் தொழிலதிபராவார்.

அதே சமயம் இவர் குமார் மங்கலம் மற்றும் நீர்ஜா பிர்லாவின் மகள். பிரபல இசை கலைஞரான அனன்யா பிர்லா தொழிலதிபராக பலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜிம் பீன்ஸ் தயாரித்த தனது முதல் தனி பாடலான லிவிங் தி லைஃப் மூலம் தனது இசை வாழ்க்கையை தொடங்கினார். ஜான்வி கபூர் மற்றும் அனன்யா பிர்லா இருவரும் நீண்ட கால நண்பர்கள். தனது தோழிக்கு 5 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த சொகுசு காரை அனன்யா பிர்லா பரிசாக வழங்கியுள்ளார்.

அதே சமயம் அனன்யா பிர்லா விரைவில் ஒரு மேக்கப் பிராண்டை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அதற்கு ஜான்விகபூர் தான் விளம்பர மாடலாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. தன் நிறுவனத்துடன் இணைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த பரிசை அவர் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு தனது இசை வாழ்க்கையை தொடங்கிய அனன்யா பிர்லா அழகு சாதன துறையில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அவருக்கு மாடலாக ஜான்வி கபூர் இருந்து வருகின்றார்.

தன் அம்மாவைப் போலவே சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் ஜான்வி கபூர் இறுதியாக தேவரா திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது பரம் சுந்தரி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஏற்கனவே பல கோடி மதிப்பிலான கார் கலெக்சன் களை வைத்திருக்கும் ஜான்வி கபூரின் கலெக்ஷனில் தற்போது இந்த விலை உயர்ந்த லம்போர்கினி காரும் இணைந்துள்ளது.

 

Nanthini

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

2 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

2 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

2 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

2 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

3 மணத்தியாலங்கள் ago