அப்படி நடந்தால் என்னை கண்டிப்பா கூப்பிடுங்க… அவதார் 3 பட ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், இயக்குனர் ராஜமௌலியிடம் வைத்த கோரிக்கை!

By Elango on மார்கழி 17, 2025

Spread the love

ஹாலிவுட் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான அவதார் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூலை குவித்தது. இந்த படம் 3 ஆஸ்கார் விருதுகளையும் வென்றது. அதன்பிறகு 13 ஆண்டுகள் கழித்து கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி அவதார் தி வே ஆப் வாட்டர் என்ற அவதார் படத்தின் 2ம் பாகம் வெளியாகி அந்த படமும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் அவதார் படத்தின் 3ம் பாகமான அவதார் ஃபயர் அண்ட் ஏஸ் படம் நாளை மறுதினம் 19ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. அவதார் 3 பாகத்தை இந்தியாவில் பிரமோஷன் செய்யும் விதமாக இயக்குனர் ராஜமௌலிக்கு, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் சிறப்பு வீடியோ நேர்காணலில் பேசியுள்ளார். அதில் அவதார் படம் குறித்த பல விஷயங்களை அவர் ராஜமௌலியிடம் பகிர்ந்து இருக்கிறார்.

   

அதிலும் குறிப்பாக இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் வாரணாசி படம் குறித்து கேட்டறிந்த ஜேம்ஸ் கேமரூன், அந்த படத்தில் புலிகளை வைத்து ஏதேனும் காட்சிகள் படமாக்கப்பட்டால் என்னை கூப்பிடுங்கள். நான் கட்டாயம் வருகிறேன் என்று ஜாலியாக கூறியிருக்கிறார். அந்த வீடியோ காட்சிகள் இப்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.