துணை ஜனாதிபதியாக சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்ற விழாவில், ஜெகதீப் தன்கர் பங்கேற்றது அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. துணை குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து 53 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளார் ஜெகதீப் தன்கர். துணை குடியரசதலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பிறகு பொது இடங்களில் தன்கர் தலைகாட்டாமல் இருந்தார்.
இதனால், அவர் பாஜகவில் இருந்தும் விலக உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பேசி வந்தார்கள். ஆனால், இன்றைய நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுள்ளதால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
