விழுப்புரம் திண்டிவனத்தில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆதரவாளர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்திற்கு ராமதாசின் ஆதரவாளர்கள் பூட்டு போட முயன்றதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. அன்புமணியை கட்சியிலிருந்து நேற்று ராமதாஸ் நீக்கிய நிலையில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி இந்த அலுவலகத்தில் அன்புமணி கொடியேற்ற திட்டமிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இன்று அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
