தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா. சினிமாவில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் இவர் தற்போது வரை முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடிப்பதற்கு முயற்சி செய்து வருகின்றார். தான் ஏற்றுக்கொண்டு நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு பல அர்ப்பணிப்புகளை செய்யக்கூடியவர். இவரை பார்ப்பவர்கள் எல்லாம் எப்போது கல்யாணம் என்று தான் கேட்பார்கள். ஒரு வழியாக அவர் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்த போது பழக்கம் ஏற்பட்ட பின்னர் திருமணம் செய்து கொண்டனர். கடைசியாக இவர் நடிப்பில் மதகஜராஜா படம் வெளியானது. இதில் விஷாலுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் சார்பட்டா 2, மிஸ்டர் எக்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் நடிகர் ஆயாவிற்கு சொந்தமான உணவகங்களை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் ஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…