Categories: சினிமா

கண்ணா 3 லட்டு திங்க ஆசையா..! சர்தார் 2 திரைப்படத்தில் இணையும் டாப் 3 நடிகைகள்.. யாரெல்லாம் தெரியுமா..?

Spread the love

2022 ஆம் ஆண்டு பி.எஸ் மித்ரன் எழுத்து இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் வெளியானது. இப்படம் எஸ் லட்சுமணன் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து ராசி கண்ணா, ரதிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, ரித்விக், யூகி சேது ,அவினாஷ், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் நடிகை லைலா 16 ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகத்திற்கு வந்து அருமையாக நடித்துள்ளார். இப்படத்தின் மொத்த வருவாய் 100 கோடி ஆகும். 2022 இல் வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூலிக்கப்பட்ட பட்டியலில் இதுவும் ஒன்று.

இப்படம் மக்களுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பிஎஸ் மித்ரன் இரண்டாவது பாகத்தை எடுக்க முன் வந்தார். இந்தப் படத்திற்கும் கார்த்தி சம்மதம் தெரிவித்ததனால் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்தது.கடந்த மாதம் 12ஆம் தேதி இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளது. மேலும் 15 ஆம் தேதி படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

படப்பிடிப்பு தொடங்கிய அடுத்த நாள் அதாவது ஜூலை 16 ஆம் அன்று படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றியுள்ள ஸ்டன்ட் மாஸ்டர் ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பு தடை செய்யப்பட்டது. உயிரிழந்த ஏழுமலை வீட்டிற்கு கார்த்தி சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன்பிறகு பிரசாந்த் ஸ்டூடியோவில் இந்த படப்பிடப்பு மிகவும் வேகமாக அதே நேரத்தில் மிகவும் கவனமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இப்படத்தின் மூன்று கதாநாயகிகளா என்று மக்களுக்கு இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்தார் 2 படத்தின் மூன்று கதாநாயகிகள் அதாவது பிரியங்காமோகன்,மாளவிகாமோகன் மற்றும் ஆஷிக்க ரங்கநாத் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா அருள் மோகன் ஏற்கனவே தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களை நடித்துக் கொண்டிருக்கிறார் .இவர் தனுஷ் உடன் இணைந்து கேப்டன் மில்லர் போன்ற படத்தை நடித்து உள்ளார்.

மாளவிகா மோகன் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் இப்போது தங்களான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதை அடுத்து ஆஷிக் ரங்கநாத் கன்னட திரைப்படத்தின் நடிகை இந்த திரைப்படம் மூலமாக தான் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகம் ஆகிறார். இந்த மூன்று நடிகைகளும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

Keerthana

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

9 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

9 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

9 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

10 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

10 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

10 மணத்தியாலங்கள் ago