மத்திய கிழக்கு பகுதியில் தற்காலிகமாக ஓய்ந்திருந்த போர் மேகங்கள், தற்போது மீண்டும் சூழத் தொடங்கியுள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் முதல் நூறு நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த அமெரிக்கா – ஈரான் இடையேயான போர், கடந்த மாதம் எட்டப்பட்ட தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சற்று தணிந்திருந்தது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் நடத்திய திடீர் கப்பல் தாக்குதலால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்ததுடன், ஈரான் மீது மீண்டும் கடுமையான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்துத் தாக்கி வருவதால், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போர்க்களத்தில் குதிக்கத் தயாராகி வருகிறது. ஈரான் மீது தங்கள் நாடு எந்த நேரத்திலும் ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கட்ஸ் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேவைப்பட்டால் இதற்கு முன்பு இல்லாத வகையில் மிகப் பெரிய படையுடன், முழு வலிமையுடன் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஈரானில் உள்ள அச்சுறுத்தல்களை வான்வழித் தாக்குதல்கள் மூலம் முற்றிலுமாக அழிக்கத் தங்கள் நாட்டு ராணுவம் முழு தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது. இது குறித்துப் பேசிய பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ், “மீண்டும் போர்க்களத்திற்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டால், இதற்கு முன்பைவிட பல மடங்கு அதிக வீரியத்துடன் திரும்புவோம்; தேவைப்பட்டால் மூன்றாவது முறையாகவும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம்” என்று எச்சரித்துள்ளார்.
இதே நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஈரான் மீது இதற்கு முன்பு எடுக்கப்பட்ட இரண்டு முக்கிய ராணுவ நடவடிக்கைகள் மூலம், அந்த நாடு ஏற்கனவே பெருமளவில் பலவீனம் அடைந்துள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த அடுத்தடுத்த அதிரடி நகர்வுகளாலும், ஈரானின் பதில் தாக்குதல் எச்சரிக்கையாலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது உச்சகட்ட போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான இளையராஜா, கடந்த ஆகஸ்ட் 12-ஆம்…
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் பாஜக இணைந்து தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கட்சியில் இணைந்தது…
டெல்லியின் துவாரகா பகுதியில் வசித்து வந்த 30 வயதான நாசியா கானம் என்ற மத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி,…
சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கை நிறுத்திவிட்டுச் சென்ற உரிமையாளர் ஒருவர், 6 மாதங்கள் கழித்து…
குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பல ஆண்டுகள் வெளிநாட்டில் தங்கி உழைத்த நபர் ஒருவர், நீண்ட இடைவெளிக்குப்…
1939-ஆம் ஆண்டு பெரு நாட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம் மருத்துவ உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. லீனா மெடினா என்ற 5 வயது…