தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றியவர் மனோபாலா. இவர் சில திரைப்படங்களை இயக்கியதோடு, தயாரிக்கவும் செய்துள்ளார். நடிகர் மனோபாலா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சில்க் ஸ்மிதா, நாகேஷ், அஜித், விஜய் என பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் காமெடிக்கென்றே ரசிகர்கள் கூட்டம் தனியாக உள்ளது.
இவரின் ஒல்லியான தோற்றமும், எதார்த்தமான உடல்மொழியோடு வார்த்தைகளை வெளிப்படுத்தும் விதமும் இவரின் முக்கிய அடையாளங்களில் ஒன்று என்று கூறலாம். 69 வயதாகும் இவருக்கு கடந்த ஜனவரி மாதம் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதன் பிறகு இவருக்கு ஆஞ்சியோ சிகிச்சையும் செய்யப்பட்டது. சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த மனோபாலா தொடர்ந்து சினிமா துறையில் பணியாற்றி வந்தார். ஆனால் திடீரென கல்லீரல் பாதிப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார் மனோபாலா. இதைத்தொடர்ந்து அவர் தனது வீட்டிலேயே காலமானார். அவருடைய இறப்புக்கு ஒட்டுமொத்த திரை பிரபலங்களும் ,ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர்.
தற்பொழுது நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் மனோபாலாவுடன் தான் நடித்த விளம்பர பட வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் ‘Miss Uuuu Mano pa’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த விளைபரப்படம் தான் இறுதியாக நடிகர் மனோபாலா நடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ…
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில், கட்டுமான தள மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த 40 வயது நபர் ஒருவர், கடுமையான நிதி…
தலைநகர் டெல்லியின் திக்ரி பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் சமைப்பது தொடர்பாகக் கணவன் கமலேஷிற்கும், அவரது 31 வயதான…
மகாராஷ்டிர மாநிலம் புனே நர்ஹே பகுதியில் உள்ள பூம்கர் பாலத்தில், அதிவேகமாக வந்த லாரி ஒன்றின் பிரேக் திடீரென செயலிழந்ததால்…
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…