தலைநகர் டெல்லியின் திக்ரி பகுதியில், வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் சமைப்பது தொடர்பாகக் கணவன் கமலேஷிற்கும், அவரது 31 வயதான மனைவி பூனமிற்கும் இடையே திடீரெனக் கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது.
சண்டை முற்றியதில் ஆத்திரமடைந்த கமலேஷ், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி பூனமை சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த பூனம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலையை மறைப்பதற்காக, தனது மனைவி தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அக்கம் பக்கத்தினரிடம் கமலேஷ் நாடகமாடியுள்ளார்.
இருப்பினும், அவரது பேச்சில் சந்தேகமடைந்த உள்ளூர்வாசிகள், தப்பிச்செல்ல முயன்ற கமலேஷை அதிரடியாக மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி போலிஸார், கமலேஷைக் கைது செய்து அவருக்குத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3,…
தமிழ்நாடு முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் முழுநீள ஆக்ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான 'சிக்மா மூலமாக…
தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் இயல்பை விடக் குறைவாகப் பெய்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுமையாக நிரம்பாமலேயே பாசனத்திற்காகத் தண்ணீர்…
நடிகரும் தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள…
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகள் உச்சகட்ட தயார் நிலையில்…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்…