நடிகை சினேகா தனது மகள், மகன் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தற்பொழுது இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரை உலகின் ‘புன்னகை அரசி’ என்று போற்றப்படும் நடிகை சினேகா, 2000 ஆம் ஆண்டு ‘இங்கே ஒரு நிலபக்சி’ என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் ‘என்னவளே’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குடும்ப பாவமான கேரக்டர்களை தேர்ந்துதெடுத்து நடித்தார்.
இதைத் தொடர்ந்து அவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம். பம்மல் கே சம்பந்தம். புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில் என இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் சூப்பர் ஹிட் ஆகியது. 2011 ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர்களுக்கு விகான் என்ற மகனும், ஆத்தியந்தா என்ற மகளும் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை சினேகா அவ்வப்போது தனது புகைப்படங்களையும், குழந்தைகளின் புகைப்படங்களையும் இணையத்தில் பதிவேற்றுவார்.
அந்த வகையில் தற்பொழுது மகன் மகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகை சினேகாவின் மகளை பார்த்த ரசிகர்கள் ‘ஆத்தியந்தா இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே?’ என்று கூறி வருகின்றனர். தற்பொழுது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது பா.…
இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன அதி” பாடலை எழுதியவர் பிரபல வங்காள கவிஞரான ரபிந்தரநாத் தாகூர். நம்மில்…
1947 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று தனது சுதந்திரக் காற்றை சுவாசிக்கத்…
தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள்…
தமிழ் திரையுலகில் '18 வயசு' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக களமிறங்கியவர் நடிகை காயத்ரி ஷங்கர். இந்த படத்தை தொடர்ந்து…
நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும்…