மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் மின்சார இருசக்கர வாகன டீலர்ஷிப் வழங்குவதாகக் கூறி, நபர் ஒருவரிடம் ₹7.5 லட்சம் மோசடி செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர், ஒரு பிரபல நிறுவனத்தின் மின்சார வாகன விற்பனை உரிமையைப் பெறுவதற்காக இணையதளத்தில் தேடியபோது, மோசடி கும்பல் உருவாக்கிய போலி இணையதளத்தில் தனது விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.
அதன் பிறகு, நிறுவனத்தின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்ட மர்ம நபர்கள், அவரிடம் போன் மூலம் பேசி, உரிமம் வழங்குவதற்கான கட்டணம், ஆவணப் பதிவு மற்றும் இதர செலவுகள் எனக் கூறிப் பல்வேறு தவணைகளாக மொத்தம் 7.5 லட்ச ரூபாயைப் பெற்றுள்ளனர். பணத்தைச் செலுத்திய பிறகு, அந்த நபர்களிடமிருந்து முறையான பதில் ஏதும் வராததைக் கண்டு சந்தேகமடைந்த அவர், நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். உடனடியாக ஜபல்பூர் காவல் நிலையத்தின் சைபர் பிரிவில் அவர் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மோசடி கும்பல் பயன்படுத்திய வங்கி கணக்குகள் மற்றும் தொலைபேசி எண்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் இணையதளம் மூலம் இத்தகைய வணிக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது, அதிகாரப்பூர்வ முகவரிகளை நேரில் சரிபார்க்க வேண்டும் என்றும், முன்பணம் செலுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…