CINEMA
அமீர் மீது கடுப்பில் இருக்கும் சூர்யா.. ‘வாடிவாசல்’ படத்திலிருந்து விலகுகிறாரா..? விடாப்பிடியாக நிற்கும் வெற்றிமாறன்..
கமர்ஷியல் இயக்குநர்கள், ஹீரோவுக்கான கதையை உருவாக்கி கோடிக்கணக்கில் லாபம் பார்க்கின்றனர். ரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ், சூர்யா போன்றவர்கள் பலரும் கமர்ஷியல் ஹீரோக்கள்தான். ஆனால், ஹீரோக்களை பெரியதாக நம்பாமல், கதையை நம்பி படம் எடுக்கும் படைப்பாளிகள் வரிசையில் இருப்பவர்தான் இயக்குநர் வெற்றிமாறன். படைப்பிலக்கியங்களை, சினிமா படமாக்கி வெற்றி பெறும் இயக்குநர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் வெற்றிமாறன். அவரது படங்களில் நடிப்பது, கதை நாயகன்களை வேற லெவலில் மாற்றிக் காட்டும்.
அந்த வகையில் இப்போது வாடிவாசல் படத்தை இயக்கி வருகிறார் சூர்யா. இதற்கிடையே ஞானவேல் ராஜா, அமீர் பஞ்சாயத்து பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கிறது. வாடிவாசல் படத்தில் மிக முக்கிய கேரக்டரில் அமீர் நடிக்கிறார். இதில் சூர்யாதான் கதாநாயகன் என்ற நிலையில், அமீர் நடிப்பதை அவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. அவர், இயக்குநர் வெற்றிமாறனிடம் சென்று, இந்த படத்தில் அமீர் கேரக்டரில் மோகன்லாலை நடிக்க வைக்கலாமா, நான் மோகன்லாலிடம் பேசி கால்ஷீட் வாங்கி தருகிறேன் என கேட்டிருக்கிறார். அதற்கு வெற்றிமாறன், இந்த படத்தின், கதையின் இயக்குநர் நான். எந்த கேரக்டரில் யாரை நடிக்க வைக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் வேண்டுமானால் விலகிக்கொள்ளுங்கள் என்று அதிரடியாக கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சூர்யா, வாடிவாசல் வேண்டாம் என முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது.
வாடிவாசல் படத்தை விட்டு சூர்யா வெளியேறுவது உறுதியாகும் பட்சத்தில், அந்த கேரக்டரில் அஜீத்குமார் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விடாமுயற்சி படத்துக்கு பிறகு வெற்றிமாறன் படத்தில் அஜீத்குமார் நடிப்பது உறுதியானாலும், இந்த படத்தில் அஜீத் குமார் நடிப்பதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை. ஏனெனில், காளைகளை அடக்குவது போன்ற காட்சிகளில் அவர் செட்டாக வாய்ப்பில்லை. அதனால், அதற்கு வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறார் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு. அதே நேரத்தில், அமீரை 100க்கு 110 சதவீதம் வாடிவாசல் படத்தை விட்டு விலக்க வெற்றிமாறன் சம்மதிக்கவே மாட்டார். ஏனெனில், வடசென்னை படத்திலேயே அவரது கேரக்டரை பேசும்படி தந்தவர் என்றும் கூறியிருக்கிறார். அமீர் எப்போ்ப்பட்ட படைப்பாளி, நடிகர் என்பதை வெற்றிமாறன் உணர்ந்திருக்கிறார்.