Connect with us

CINEMA

பிரபல வாரிசு நடிகரை காதலிக்கிறாரா நடிகை ரிது வர்மா..? புலியங்கொம்ப தான் புடிச்சிருக்காங்க..

தமிழ் சினிமாவில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் ரித்து வர்மா. அதன் பிறகு இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இவர் ஒரு சிறந்த நடிகை மற்றும் மாடலாக இருந்து வருகிறார். இவருக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த நிலையில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

   

குறும்படங்கள் மற்றும் துணை வேடங்களில் நடித்து வந்த இவர் பெல்லி சூப்புலு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்காக இவர் சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். தெலுங்கு குறும்படமான அனுகோகுண்டாவில் நடித்ததன் மூலம் இவர் பிரபலமானார்.

இவர் இறுதியாக வெளியான விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் நடித்திருந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு குறும்படம் 48HR திரைப்பட திட்ட போட்டியில் சிறந்த திரைப்பட விருதையும் பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான பெண் விருதைப் பெற்ற இவர் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் இவர் வாரிசு நடிகர் ஒருவரை காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அதாவது நடிகை ரிது வர்மா, நடிகர் சிரஞ்சீவியின் குடும்பத்தை சேர்ந்த வைஷ்ணவ் தேஜை காதலிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதியின் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிரஞ்சீவி குடும்பத்துடன் நடிகை ரிது வர்மாவும் கலந்துகொண்டுள்ளனர். அதன்பின் தான் வைஷ்ணவ் தேஜ் மற்றும் ரிது வர்மா காதலிக்கிறார் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் வைஷ்ணவ தேஜ் இதுகுறித்து பேசியுள்ளார்.

இதில் ‘அல்லு அர்ஜுன் கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் திருமண பெண் லாவண்யாவின் தோழியாக தான் ரிது வர்மா கலந்துகொண்டார். அதற்கு மேல் அதில் எதுவும் இல்லை. மற்றபடி நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று வெளியான தகவல் அனைத்தும் உண்மை இல்லை’ என வெளிப்படையாக கூறி அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இந்த செய்தி தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

 

Continue Reading

More in CINEMA

To Top