#image_title
ஜெயலலிதா தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகரும் தமிழ்நாட்டில் முதலமைச்சராகவும் இருந்தவர் ஆவார். மைசூர் சமஸ்தானம் மாண்டியாவில் பிறந்த ஜெயலலிதா சிறுவயதிலேயே இவரது தந்தை காலமானதால் தனது தாய் வேதவல்லியுடன் சென்னைக்கு குடி பெயர்ந்தார். இவரது தாய் வேதவல்லி சந்தியா என பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தார்.
இதன் மூலம் ஜெயலலிதாவுக்கு இளம் வயதிலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி தனது 17வது வயதில் வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜெயலலிதா பள்ளியில் படிக்கும்போதே சினிமாவிற்கு வந்ததால் அதற்கு பிறகு அவரால் கல்லூரிக்கு சென்று படிக்க இயலவில்லை. தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்த ஜெயலலிதா எம்ஜிஆர் உடன் இணைந்து 28 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். ஜெயலலிதா எம்ஜிஆர் ஜோடியை மக்கள் வெகுவாக ரசித்தனர்.
அதற்குப் பிறகு எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்து மக்களுக்கு பணியாற்ற தொடங்கிய சிறிது காலத்திலேயே அந்த கட்சியில் ஜெயலலிதாவும் இணைந்து பணியாற்றினார். பின்னர் எம்ஜிஆர் இறந்த பிறகு அந்த கட்சியை கையகப்படுத்தி வெற்றிகரமாக நடத்தி வந்தார் ஜெயலலிதா. தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆறுமுறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. தான் இறக்கும் வரையிலும் எம்ஜிஆர் போலவே முதலமைச்சர் ஆகவே இருந்து மறைந்தார் ஜெயலலிதா.
பெண்களுக்காக பல நலத்திட்டங்களையும் புதுமையான திட்டங்களையும் கொண்டு வந்ததால் இவரை அம்மா என்றும் புரட்சித்தலைவி என்றும் மக்கள் அன்போடு அழைத்தனர். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார் ஜெயலலிதா. இவரை இரும்பு பெண்மணி என்றும் அழைக்கின்றனர். அப்படிப்பட்ட ஜெயலலிதாவையே ஒரு வெளிநாட்டு பெண் கவர்ந்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.
வெளிநாட்டிற்கு ஒருமுறை ஜெயலலிதா சென்று இருக்கும்போது அங்கு ஒரு தம்பதியை சந்தித்து இருக்கிறார். அவர்கள் தான் ராபர்ட் மற்றும் ரீட்டா. ராபர்ட் பிசியான தொழில் அதிபர் ஆவார். ரீட்டா வீட்டில் இருக்கும் பொறுப்புகளை ஒரு சாதாரண பெண்மணி போலவே எல்லாம் கவனித்து வந்திருக்கிறார். ஒரு நாள் கலந்துரையாடும் போது அவரது கணவர் அவரை அவமானப்படுத்தியதன் காரணமாக பெண் என்றதால் தன்னை அவமானப்படுத்துகிறார் என்று 30 வருடங்களுக்கு மேலாக தனது கணவனிடம் பேசாமல் இருந்திருக்கிறார் ரீட்டா. இதை பார்த்த ஜெயலலிதா இவ்வளவு வைராக்கியம் கொண்ட ஒரு பெண்மணியா என்று அவரை பார்த்து வியந்தாராம்.
தனக்கு எதிராக இணையத்தில் பரப்பப்படும் அவதூறுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில்…
சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பல நிதி நெருக்கடிகள் மற்றும் ரிலீஸ்…
சென்னை அம்பத்தூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கயிற்றால் கட்டி, கொடூரமாக அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்துவிட்டு…
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கும்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில், தனது காதலைப் பிரித்த தந்தைக்குப் பாடம் புகட்ட, ஒரு இளம்பெண் தனது காதலனை வைத்தே சொந்த…
அமமுகவின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு எழுதிய அதிரடி கடிதத்துடன்…