“போரால் முடியாததை மேஜையில் கேட்காதீர்!” – அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் கர்ஜனை… உலகையே உலுக்கும் அடுத்தகட்ட பதற்றம்….!

Spread the love

பாகிஸ்தானில் நடைபெற்ற ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான 21 மணி நேர நீண்ட அமைதி பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்தது. ஒரு வார கால தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இடையே, ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமையிலான குழுக்கள் இந்த ஆலோசனையில் ஈடுபட்டன. விடிய விடிய நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் தத்தமது நிலைப்பாடுகளில் உறுதியாக இருந்ததால், போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா அல்லது மீண்டும் போர் தீவிரமடையுமா என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

பேச்சுவார்த்தை தோல்வி குறித்து ஈரான் தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை. “போர்க்களத்தில் எதையெல்லாம் அமெரிக்காவால் சாதிக்க முடியவில்லையோ, அதையெல்லாம் பேச்சுவார்த்தை மேஜையில் கேட்டுப் பெற அமெரிக்கா முயல்கிறது” என்று ஈரான் அதிருப்தி தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்திலும், நாட்டின் இறையாண்மை சார்ந்த கோரிக்கைகளிலும் அமெரிக்கா காட்டிய பிடிவாதம் பேச்சுவார்த்தை முறிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.

மறுபுறம், அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஈரானின் அணு ஆயுதக் கொள்கையைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்காது என்பதற்கான எவ்வித உறுதிப்பாட்டையும் வழங்க முன்வரவில்லை என்றும், அமெரிக்காவின் பாதுகாப்பு நிபந்தனைகளை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அணு ஆயுதக் கருவிகளைத் தேடுவதை நிறுத்த ஈரான் ஒப்புக்கொள்ளாத வரை, அடுத்தகட்ட நகர்வு சவாலாகவே இருக்கும் என்பதை அமெரிக்கத் தரப்பு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அடுத்தகட்டமாக ஈரான் மீது எத்தகைய ராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் என்பது சர்வதேச அளவில் பெரும் கேள்வியாக உருவெடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள சூழலில், இந்தப் போர் பதற்றம் உலகளாவிய தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். அடுத்த சுற்று பேச்சுவார்த்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லாததால், மத்திய கிழக்கு பிராந்தியம் மீண்டும் ஒரு போர்க்களமாக மாறும் சூழல் நிலவுகிறது.

Nanthini

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

3 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

3 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

3 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

3 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

3 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

3 மணத்தியாலங்கள் ago