ஷாக்… பாகிஸ்தான் சதி?… கரப்பான் பூச்சி கும்பலில் தீவிரவாதிகள்… பிரதமர் பதவிக்கு சர்வதேச சதித்திட்டம்?… பாஜகவின் அதிரடி குற்றச்சாட்டு…!

Spread the love

திருச்சியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடிக்கு இளைஞர்கள் மீது மிகுந்த அக்கறை உள்ளது என்றும் தெரிவித்தார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், அணை கட்ட அனுமதி இல்லை என்ற போதிலும் இதனை மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களில் மாணவர்கள் போர்வையில் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த குற்றவாளிகள் ஊடுருவி அமைதியைச் சீர்குலைக்க முயல்வதாக அவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். வங்கதேசத்தில் நடந்தது போன்ற வன்முறைகளை உருவாக்க உலக நாடுகளின் சதி நடப்பதாகவும், பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுவதும், தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் நிலைப்பாடும் ஒன்றாகவே உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.

நீட் தேர்வு விவகாரத்தில் நிலவும் குளறுபடிகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் வேளையில், நீட் தேர்வே வேண்டும் என்பதே மத்திய அரசின் தெளிவான நிலைப்பாடு என அவர் உறுதியளித்தார். எனவே, நீட் தேர்வுக்காக டெல்லியில் போராடும் மாணவர்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் என்றும், மாணவர்கள் அல்லாத பிற போராட்டக்காரர்களையும் எதிர்க்கட்சிகளையும் மத்திய அரசு பார்த்துக்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

Swetha

Recent Posts

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த விழாவில் அலட்சியமும் அவமதிப்புமே பரிசு… மக்களை புண்படுத்திட்டீங்க… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேக விவகாரத்தில் வானதி சீனிவாசன் கண்டனம்…!!

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…

35 minutes ago

“மின் கட்டணத்தைப் பார்த்து சொரணை வந்திருக்கு…” மதுக் கிண்ணத்தில் விழுந்த வண்டு போல மயக்கத்தில் மக்கள்…” தவெக ஆட்சியை கிழித்தெறிந்த ஆர்.எஸ். பாரதி…!!

சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…

47 minutes ago

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” “பூங்காற்று திரும்புமா பாட்டு கேட்ட காரோட்டிக்கு ஷாக்… கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய ஸ்கூட்டி பெண்… பகீர் சம்பவம்…!!!

திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…

55 minutes ago

” அறங்காவலர்களை ஒதுக்கிவிட்டு அராஜகம்…” திருப்பணிகளை செய்தது திமுக அரசுதான்… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடியில் கொந்தளித்த பிடிஆர்…!!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…

1 மணத்தியாலம் ago

“10 நிமிஷத்துல உள்ள விடலைனா கேட்டை உடைப்போம்…” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்கள் கொந்தளிப்பு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…

2 மணத்தியாலங்கள் ago

“உள்ளே வராதீங்க… என்ன செஞ்சீங்க..?” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு…! பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு…!!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…

2 மணத்தியாலங்கள் ago