தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வருபவர் சூப்பர் சுப்பராயன். இவருடைய மகன் திலிப் சுப்பராயன். தற்போது சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். தமிழ், தெலுங்கு நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இவர் பணியாற்றியுள்ளார். ஹரி ஹர வீர மல்லு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரும் இவர் தான். இந்த நிலையில் இவர் மீது இன்ஸ்டாகிராம் பிரபலம் இலக்கியா பரபரப்பு புகார் அளித்துள்ளார் . அதனை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிலும் ஷேர் செய்துள்ளார். அதில், “என்னுடைய சாவிற்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும்தான் காரணம். என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டான்.
ஆறு வருடமாக அவனுடன் இருந்திருக்கிறேன். நிறைய பொண்ணுங்க கூட பழக்கம். அதைக் கேட்டால் என்னை போட்டு அடிக்கிறான். நானும் பொறுத்து பொறுத்து என்னால் முடியவில்லை. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடின்னு அடிப்பான்” என்று ஸ்டோரில் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள வீட்டில் இலக்கியா தற்கொலை முயற்சி செய்துள்ளார். அதிக ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அவரை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை பெற்று வருகிறார். அவர்…
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்கு…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
தபால் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பெரம்பூரில் விஜய், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன்,…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…