புதுச்சேரி பிராந்தியம் ஏனாம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆடலரசன், வழக்கு விசாரணைக்காக போலீஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கள் அருந்திவிட்டு குத்தாட்டம் போட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நான் குடித்தது கள் இல்லை, மோர் என விளக்கம் அளித்து வீடியோவும் வெளியிட்டுள்ளார். அவருடன் வாகனத்தில் இருந்த 4 போலீசார் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
