தர்மபுரி மாவட்டம் தும்பல் அல்லி கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி மங்கம்மாள். இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் 16 வயதுடைய இரண்டாவது மகள் அதே பகுதியைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவரை காதலைத்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
தற்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதுகுறித்து அறிந்த சமூக நலத்துறை அலுவலர் பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். உடனே பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீரம்மாள் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்து பெண்ணுக்கு 18 வயது ஆவதற்கு முன்பு திருமணம் செய்து விட்டீர்கள்.
எனவே குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் உங்களை கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம். எனவே வழக்கு பதிவு செய்யாமல் இருக்க 50 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இது குறித்து மங்கம்மாள் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மங்கம்மாள் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
