மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி இரயில் நிலையத்தில், ஹரித்வார் – பூரி உத்கல் எக்ஸ்பிரஸ் இரயிலின் கழிவறையில் பச்சிளம் குழந்தை ஒன்று அநாதையாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மனிதநேயத்தை உலுக்கியுள்ளது. தாயின் அரவணைப்பில் இருக்க வேண்டிய அந்தப் பிஞ்சு குழந்தை, இரயிலின் குளிர்ந்த தரையில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தது பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதறவைத்துள்ளது. பிறந்த சில மணிநேரமே ஆன அந்த உயிரை எவ்வித இரக்கமுமின்றி மரணத்தின் விளிம்பில் விட்டுச் சென்ற அந்தப் பெற்றோரின் கல்நெஞ்சம் சமூகத்தின் மீதான பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
इंसानियत को झकझोर देने वाली खबर
मध्यप्रदेश के कटनी में हरिद्वार पुरी उत्कल एक्सप्रेस के टॉयलेट में एक नवजात शिशु लावारिस पड़ा मिला जिस मासूम को माँ की गोद में होना चाहिए था उसे ट्रेन की ठंडी फर्श पर अपनों ने ही मरने के लिए छोड़ दिया
सोच कर ही दिल भर आता है कि उस नन्ही सी जान… pic.twitter.com/Sq4dr6bdgM
— Aryan (@aryankumar86) March 31, 2026
அதிர்ஷ்டவசமாக, இரயில்வே போலீஸார் சரியான நேரத்தில் அந்தக் குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அந்தக் குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அந்தப் பிஞ்சு உயிர் நலமுடன் மீண்டு வர வேண்டும் எனப் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் வேளையில், “அந்த குழந்தை செய்த பாவம் என்ன?” என்ற கேள்வி அனைவர் மனதிலும் ஒரு ரணமாய் எழுந்துள்ளது.
