மத்தியப் பிரதேசத்தின் பியோரா பகுதியைச் சேர்ந்த சமூக ஊடக உள்ளடக்க உருவாக்குநர் பிட்டு தபாஹி, தனது பகுதியில் உள்ள அஜ்னார் நதியைத் தூய்மைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். நதி மாசடைவதைத் தடுக்க அவர் எடுத்து வரும் இந்தத் தனிமனித முயற்சி தொடர்பான காணொளிகள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இருப்பினும், சமூக வலைதளங்களில் புகழைப் பெறுவதற்காகவும், ‘லைக்’குகளுக்காகவும் மட்டுமே அவர் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாகச் சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர்.
பிட்டு மீதான இந்த எதிர்மறையான விமர்சனங்களுக்குத் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ‘எக்ஸ்’ (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தின் வாயிலாகத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். ஒரு நற்பணியைச் செய்யும்போது அதன் மூலம் சமூக ஊடகங்களில் அங்கீகாரம் கிடைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று அவர் பிட்டுவிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். பிட்டுவின் செயலைப் பாராட்டிய அவர், விமர்சகர்களின் வாயை அடைக்கும் வகையில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பலரும் பிட்டு தபாஹிக்கு ஆதரவாகத் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “ஊர் வாயை மூட முடியாது, நற்பணியைத் தொடருங்கள்” எனப் பயனர்கள் அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர். ஒரு இளைஞராகச் சமூகப் பொறுப்புடன் நதியைச் சுத்தம் செய்யும் பிட்டு, மற்ற இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
This young man from Biaora, M.P, was criticised for claiming to have cleaned parts of a river just in order to gain social media views.
Well, we usually complain that social media rewards the trivial rather than the meaningful
So If a desire for ‘likes’ can become a force for… pic.twitter.com/ARgEhphuQN
— anand mahindra (@anandmahindra) March 30, 2026
