ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ராணுவ வீரர்களுக்கு உதவிய இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பஞ்சாபில் ஃபெரோஸ்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஷ்ரவானின் கல்விச்செலவை ராணுவத்தின் Golden Arrow Division ஏற்றுக்கொள்ளும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள் . பத்து வயது உடைய இந்த சிறுவன் தன்னுடைய ஊரில் போர்க்கால சூழ்நிலைகளை கண்டதால் தான் வளர்ந்து இந்திய ராணுவத்தில் சேர விரும்புவதாக கூறியுள்ளார். அவருடைய இளம் வயது மற்றும் எல்லைகளில் கடினமான சூழ்நிலைகள் இருந்தாலும் எதுவுமே அவரை தடுக்கவில்லை.
தன்னுடைய குடும்பத்தின் விவசாய நிலத்தில் முகாமிட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு போர்க்காலத்தில் ஐஸ், பால், தண்ணீர் மற்றும் லஸ்ஸி ஆகியவற்றை வழங்கியுள்ளார். போர்க்காலத்தில் பலரும் பயந்து போனபோது இந்த சிறுவன் மட்டும் ஒவ்வொரு நாளும் அவர்களிடம் ஓடி சென்று அவர்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை வீரர்களுக்கு நினைவூட்டியுள்ளார். மேலும் இது குறித்த அவர் கூறுகையில், “நான் பயப்படவில்லை நான் பெரியவன் ஆனதும் ஒரு ராணுவ வீரராக வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் என்னை மிகவும் நேசித்தார்கள்” என்று கூறியுள்ளார். இந்த சிறுவனின் சேவையால் கவரப்பட்ட இந்திய ராணுவம் அவரை கௌரவித்துள்ளது.
அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…
பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…
வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…
தமிழக முன்னாள் முதல்வர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.…
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரைத் தொடர்ந்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறப்பு அமர்வில் மூன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற…