ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ராணுவ வீரர்களுக்கு உதவிய இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பஞ்சாபில் ஃபெரோஸ்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஷ்ரவானின் கல்விச்செலவை ராணுவத்தின் Golden Arrow Division ஏற்றுக்கொள்ளும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள் . பத்து வயது உடைய இந்த சிறுவன் தன்னுடைய ஊரில் போர்க்கால சூழ்நிலைகளை கண்டதால் தான் வளர்ந்து இந்திய ராணுவத்தில் சேர விரும்புவதாக கூறியுள்ளார். அவருடைய இளம் வயது மற்றும் எல்லைகளில் கடினமான சூழ்நிலைகள் இருந்தாலும் எதுவுமே அவரை தடுக்கவில்லை.
தன்னுடைய குடும்பத்தின் விவசாய நிலத்தில் முகாமிட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு போர்க்காலத்தில் ஐஸ், பால், தண்ணீர் மற்றும் லஸ்ஸி ஆகியவற்றை வழங்கியுள்ளார். போர்க்காலத்தில் பலரும் பயந்து போனபோது இந்த சிறுவன் மட்டும் ஒவ்வொரு நாளும் அவர்களிடம் ஓடி சென்று அவர்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை வீரர்களுக்கு நினைவூட்டியுள்ளார். மேலும் இது குறித்த அவர் கூறுகையில், “நான் பயப்படவில்லை நான் பெரியவன் ஆனதும் ஒரு ராணுவ வீரராக வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் என்னை மிகவும் நேசித்தார்கள்” என்று கூறியுள்ளார். இந்த சிறுவனின் சேவையால் கவரப்பட்ட இந்திய ராணுவம் அவரை கௌரவித்துள்ளது.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…