அருமையான திட்டம்..! வெறும் ரூ.755 மட்டும் இருந்தால் போதும்… ரூ.15 லட்சம் பணம் கிடைக்கும்…!!

By Soundarya on மார்கழி 25, 2025

Spread the love

இந்திய அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB), பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மிகக்குறைந்த பிரீமியத்தில் ‘விபத்துக் காப்பீட்டுத் திட்டங்களை’ அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு வெறும் ரூ.520, ரூ.555 மற்றும் ரூ.755 ஆகிய மூன்று விதமான பிரீமியத் தொகைகளில் இத்திட்டம் கிடைக்கிறது. செலுத்தும் பிரீமியத்திற்கு ஏற்ப முறையே ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை விபத்துக் காப்பீட்டுத் தொகையை (Insurance Coverage) பெற முடியும்.

விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு மட்டுமின்றி, நிரந்தர ஊனம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது.  இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் அல்லது கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் தங்களுக்கு அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்தை (India Post Branch) நேரில் அணுகலாம்.