இனி பயமில்லை..! பெண் பயணிகளுக்கு இனி பெண் ஓட்டுநர்கள்… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!!

By Soundarya on மார்கழி 25, 2025

Spread the love

ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ போன்ற டாக்ஸி சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, இனி சவாரி தொடங்குவதற்கு முன்பே பயணிகளிடம் கட்டாயமாக ‘டிப்ஸ்’ (Tips) கேட்கும் நடைமுறைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், அவர்கள் விரும்பினால் பெண் ஓட்டுநர்களை மட்டுமே தேர்வு செய்யும் (Option for Female Drivers) புதிய வசதியைச் செயலிகளில் கட்டாயம் சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த விதிமுறைகள் பயணிகளுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளன.