இந்த விஷயத்துல மாரி செல்வராஜ்க்கு இருக்கிற தைரியம் எனக்கு சுத்தமா இல்ல… உருக்கமாக பேசிய பா ரஞ்சித்…

By admin on ஆவணி 24, 2024

Spread the love

சென்னை ஆவடியில் பிறந்து வளர்ந்தவர் பா ரஞ்சித். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இயக்குனர் சிவ சண்முகத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் சென்னை 600028 திரைப்படத்தில் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் பா ரஞ்சித்.

   

2012 ஆம் ஆண்டு மிகவும் சிறிய பட்ஜெட்டை கொண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா ரஞ்சித். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக அட்டகத்தி படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. பின்னர் 2014 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் திரைப்படத்தை இயக்கினார் பா ரஞ்சித். இந்த திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது.

   

அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கபாலி மற்றும் காலா திரைப்படத்தை இயக்கினார். 2021 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை இயக்கி முன்னணி இயக்குனராக நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார் ரஞ்சித். சார்பட்டா பரம்பரை திரைப்படம் முற்றிலும் வேறுபட்ட கதைக்களமாக இருந்தது. அடுத்ததாக 2022 ஆம் ஆண்டு நட்சத்திரம் நகர்கிறது தற்போது தங்கலான் திரைப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

 

பா ரஞ்சித் இயக்குனராக மட்டுமல்லாமல் நீலம் ப்ரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். அவர் தயாரித்த முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். பின்னர் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, பொம்மைநாயகி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பா ரஞ்சித் மாரி செல்வராஜை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால், வாழை திரைப்படத்தில் சின்ன வயசுல பட்ட கஷ்டங்களை எல்லாத்தையும் ஒரு திரை காவியமா அற்புத படைப்பா உருவாக்கி இருக்காரு மாரி செல்வராஜ். அதே மாதிரி சின்ன வயசுல நான் பட்ட கஷ்டங்களை இந்த மாதிரி ஒரு படைப்பா உருவாக்குற தைரியம் என்கிட்ட சுத்தமா இல்ல. அந்த விஷயத்தில் மாரி செல்வராஜ் தைரியமான ஆளு தான் என்று கூறியிருக்கிறார் பா ரஞ்சித்.