தமிழகத்தில் விரைவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட உள்ள நிலையில், புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்துள்ள லட்சக்கணக்கான மக்கள் அது எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது, ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் தேதி வாரியாகத் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில், அதிகபட்சமாக ஒரே வாரத்திற்குள் புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
