ராசா ஆர்மோனியம் வாசிப்பது போல கனவு கண்டீயா..?… சிறு வயதில் இளையராஜாவுக்கு அதிர்ச்சி கொடுத்த தாயார்!

By vinoth on கார்த்திகை 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

   

அதுபோல இளையராஜாதான் நாட்டுப்புற பாடல்களில் இருந்தே ட்யூன்களை எடுத்து அதை மெருகேற்றி பாடல்களை கொடுத்து மக்களை மெய்மறந்து ரசிக்க வைத்தார். இளையராஜா அறிமுகமான போது அவருக்கு மக்களிடம் கிடைத்த ஆதரவு அப்போதிருந்த விமர்சகர்களிடம் கிடைக்கவில்லை.

   

 

ஆனாலும் விமர்சகர்களை ‘ஓரம்போ’ என சொல்லிவிட்டு வெற்றிகொடி நாட்டி, விரைவில் பொன் விழா காணவுள்ளார். இந்நிலையில் சிறுவயதில் இசை எப்படி தனக்குள் வந்தது என ஒரு நேர்கானலில் கூறியுள்ளார். அதில் “நான் சிறுவயதாக இருக்கும்போது, எங்கள் வீட்டில் அண்ணன் ஒரு ஹார்மோனியம் வச்சிருந்தார். அத எடுத்து வாசிக்கலாம்னா, எங்க அண்ணன் அடிச்சுடுவார்.

அதனால் அவர் இல்லாத போதுதான் திருட்டுத் தனமாக எடுத்து ஹார்மோனியத்த வாசிப்பேன். அப்படிதான் ஹார்மோனியம் என் மனசுக்குள் வந்தது. ஒரு நாள் நான் தூங்கிஎழுந்த போது என் அம்மா என்னிடம் “என்ன ராசா ராத்திரி கனவுல ஹார்மோனியம் வாசிக்குற மாதிரி கனவு கண்டியா” எனக் கேட்டார். ஏன் அப்படி கேட்கிறீர்கள் என்று கேட்டபோது “ராத்திரி என் நெஞ்சில் உன் கைகள் ஆர்மோனியம் போல மேலயும் கீழயும் போயிட்டு வந்துச்சு” என சொன்னார்” எனக் கூறியுள்ளார்.